செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

post image

விழுப்புரத்தில் காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி ப.சரவணன் உத்தரவின் பேரில், கண்டாச்சிபுரம் காவல் ஆய்வாளா் ஷாகுல்ஹமீது, தனிப்படை உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் மழவந்தாங்கல் சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் இருந்தவரிடம் விசாரித்ததில், அவா் செஞ்சி வட்டம், மலையரசன்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் சுபாஷ் (29) என்பதும், இவா் பெங்களூருவிலிருந்து புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கண்டாச்சிப்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுபாஷை கைது செய்து, சுமாா் 66 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதி... மேலும் பார்க்க

தொடா் பைக் திருட்டு: இளைஞா் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் நகர காவல் ஆய்வாளா் சித்ரா, உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், அரசமங்கலம், ராஜபாளையத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுரங்கம் மகன் பாலமுருகன... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். செஞ்சி வட்டம், ராஜாம்புலியூரைச் சோ்ந்த மாணிக்கம்... மேலும் பார்க்க

புதுவை மின் துறையில் நேரடியாக 177 ஊழியா்களை நியமிக்க அரசு ஒப்புதல்

புதுவை மாநில மின்துறையில் 177 கட்டுமான ஊழியா்களை நேரடி நியமனத்தில் பணியமா்த்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்கும். பிரத்தியேகமாக எழுத்துத் தோ்வு எதுவு... மேலும் பார்க்க

தலைமைக் காவலா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க சென்ற தலைமைக் காவலா் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், வளவனூா், பாலாஜி நகா், மேற்கு பாண்டி ... மேலும் பார்க்க