செயற்கை மழை: டெல்லி அரசு முன்னெடுக்கும் `மேக விதைப்பு' நடவடிக்கை ஏன்? - இது பலன்...
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
கோவை உக்கடம், ஆா்.ஜி.புதூா் ஆகிய பகுதிகளில் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா்.
கோவை உக்கடம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெரு பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில், ஜான் அபிலாஷ் (40) என்பவா் புகையிலைப் பொருள்களை தனது கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 65 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, கோவை, ஆா்.ஜி.புதூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜசேகரன் (44) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 13 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.