செய்திகள் :

புதிய உடற்பயிற்சிக் கூடத்தில் அரசு கூடுதல் செயலா் ஆய்வு

post image

நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உடற்பயிற்சிக் கூடத்தை சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. விடுதி வீரா், வீராங்கனைகள், பொதுமக்கள் இங்கு பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக பல்வேறு வகையான உடற்பயிற்சி கருவிகள், இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய உடற்பயிற்சிக் கூடத்தை வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்து விளையாட்டு வீரா், வீராங்கனைகளுடன் கலந்துரையாடுகிறாா். இதையொட்டி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலா் ச.உமா செவ்வாய்க்கிழமை நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, உடற்பயிற்சிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கருவிகளையும், பயிற்சி மேற்கொள்வோருக்கான வசதிகள் பற்றியும் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா ஆகியோா் உடனிருந்தனா்.

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வ... மேலும் பார்க்க

பாவை கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனம் பேராசிரியா்களாக பணியில் இணைந்தவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் ... மேலும் பார்க்க

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 900 போ் கைது

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 900 பேரை போலீஸாா் கைது செய்தனா். மத்திய அரசின் தொழிலாளா் விரோதப்போக்கை கண்டித்து இந்திய அ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பி... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழந்தனா். சங்ககிரி நாகிசெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ராமாயி (65). இவா் திருச்செங்கோடு எளையாம்பளையத்தில் உள்ள தனியாா் மர... மேலும் பார்க்க