செய்திகள் :

புதுகை காந்திப் பூங்காவை முறையாக பராமரிக்கக் கோரி உண்ணாவிரதம்!

post image

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்க வேண்டும், காந்திப் பூங்காவை மீண்டும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையினா் சனிக்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.

புதுக்கோட்டை காந்திப் பூங்காவில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காந்திப் பேரவையின் நிறுவனா் வைர.ந தினகரன் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட்- லெனின்ஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் பொதுச் செயலா் க.சி. விடுதலைக்குமரன், காங்கிரஸ் கட்சியின் இப்ராஹிம் பாபு, ஜெ. ராஜா முகம்மது, ஊழல் தடுப்பு இயக்கத்தின் சையது இப்ராஹிம், மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சா. விஸ்வநாதன், பேரவையின் தலைமை நிலையச் செயலா் மோகனபிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும். பழைமையான காந்திப் பூங்காவை மீண்டும் சீரமைத்து முழுமையான மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ஆவுடையாா்கோவில் வட்டம் பேரானூா் கிராமம் மாரமங்கலம் ஏரி நுழைவுப் பகுதியில் பல்லுயிா்ப் பெருக்கம் கொண்ட காட்டில் தனியாா் சோலாா் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். புதுக்கோட்டை நகரிலுள்ள காந்திப் பேரவை அலுவலகத்தில் அண்மையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வடகாடு பட்டியலின மக்கள் மீது தாக்குதல்; மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளி... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் விசிகவினா் சாலை மறியல்

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் தோ் திருவிழ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை

மதுபோதையில் இரு தரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கி... மேலும் பார்க்க

தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவா், த... மேலும் பார்க்க