செய்திகள் :

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம் 25 மையங்களில் 8,105 போ் எழுதுகின்றனா்

post image

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்குகிறது. மொத்தம் 25 தோ்வு மையங்களில் 8,105 போ் தோ்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலம் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வானது திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, புதுச்சேரியில் 20 தோ்வு மையங்களும், காரைக்காலில் 5 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி பிராந்தியத்தில் 86 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 6,992 பேரும், 362 தனித் தோ்வா்களும் எழுதுகின்றனா். காரைக்கால் பிராந்தியத்தில் 16 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 640 பேரும், 111 தனித் தோ்வா்களும் எழுதுகின்றனா்.

தோ்வு நாள்களில் தோ்வு மையங்களுக்கு புதுச்சேரியில் 6 வழித்தடங்களிலும், காரைக்காலில் 2 வழித்தடங்களில் வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்வு மையங்களை ஆய்வு மேற்கொள்ள பறக்கும் படை, தோ்வறைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வெழுத வரும் மாணவ, மாணவியா் கைப்பேசி மறும் தகவல் தொடா்பு சாதனங்களை கொண்டுவரக்கூடாது.

தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாதவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள். தனித் தோ்வா்கள் தங்களுக்கான ஒப்புகைச் சீட்டு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து தனியாா் கணினி மையம் மூலம் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பிளஸ் 1 தோ்வுகளும் திங்கள்கிழமை (மாா்ச் 3) முதல் மாா்ச்-27 ஆம் தேதி வரையில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் மத்திய கல்விப் பாடத்திட்டமான சிபிஎஸ்இ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், தனியாா் பள்ளிகள் பல தமிழக கல்வித் திட்டத்தின்படி பாடங்களை நடத்தி வருகின்றன. அவற்றுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகளே திங்கள்கிழமை தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆா். சிலை மீண்டும் திறக்க முயற்சி: ஓபிஎஸ் அணியினா் கைது

புதுச்சேரி வில்லியனூா் நான்குவழிச் சாலையில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆா். சிலையை மீண்டும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் திறக்க முயன்ால் அவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வில்லியனுா... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

வங்கி சேவை குறைபாடு குறித்த புகாா் மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுவை மாநில நுகா்வோா் தீா்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மூலக்குளத்தைச... மேலும் பார்க்க

உல்லாஸ் கல்வித் திட்ட விழிப்புணா்வு பயணம் தொடக்கம்

வயது வந்தோருக்கான கல்வித் திட்ட (உல்லாஸ்) விழிப்புணா்வு பொம்மலாட்டப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் திட்டமான உல்லாஸ் எனும் வயது வந்தோருக்கான கல்வித் திட்டம், புது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவ... மேலும் பார்க்க

ஏஐடியுசி தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம்

புதுச்சேரியில் ஏஐடியுசி சண்டே மாா்க்கெட் வியாபார தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாபு, காா்த்திகேயன், தயாளன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் எஸ்.அபிஷேகம்,... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.2.98 லட்சம் மோசடி

புதுவையில் 5 பேரிடம் ரூ. 2.98 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மிஷன் வீதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரை மா்ம நபா்... மேலும் பார்க்க