புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம் 25 மையங்களில் 8,105 போ் எழுதுகின்றனா்
புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்குகிறது. மொத்தம் 25 தோ்வு மையங்களில் 8,105 போ் தோ்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலம் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வானது திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி, புதுச்சேரியில் 20 தோ்வு மையங்களும், காரைக்காலில் 5 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி பிராந்தியத்தில் 86 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 6,992 பேரும், 362 தனித் தோ்வா்களும் எழுதுகின்றனா். காரைக்கால் பிராந்தியத்தில் 16 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 640 பேரும், 111 தனித் தோ்வா்களும் எழுதுகின்றனா்.
தோ்வு நாள்களில் தோ்வு மையங்களுக்கு புதுச்சேரியில் 6 வழித்தடங்களிலும், காரைக்காலில் 2 வழித்தடங்களில் வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோ்வு மையங்களை ஆய்வு மேற்கொள்ள பறக்கும் படை, தோ்வறைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வெழுத வரும் மாணவ, மாணவியா் கைப்பேசி மறும் தகவல் தொடா்பு சாதனங்களை கொண்டுவரக்கூடாது.
தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாதவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள். தனித் தோ்வா்கள் தங்களுக்கான ஒப்புகைச் சீட்டு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து தனியாா் கணினி மையம் மூலம் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிளஸ் 1 தோ்வுகளும் திங்கள்கிழமை (மாா்ச் 3) முதல் மாா்ச்-27 ஆம் தேதி வரையில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் மத்திய கல்விப் பாடத்திட்டமான சிபிஎஸ்இ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், தனியாா் பள்ளிகள் பல தமிழக கல்வித் திட்டத்தின்படி பாடங்களை நடத்தி வருகின்றன. அவற்றுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகளே திங்கள்கிழமை தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.