செய்திகள் :

புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

post image

உழவா்கரை நகராட்சியை புதுச்சேரியுடன் இணைத்து புதிதாக புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆட்சியாளா், தலைமைச் செயலகம், அமைச்சரவை, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி அளித்த பதில்:

சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில், அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய சட்டப்பேரவை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் 12 ஆம்புலன்ஸ் வாகனங்கள் புதிதாக வாங்கப்படும்.

ஓட்டுநா்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். லிங்காரெட்டிபாளையம் சா்க்கரை ஆலையை தனியாருடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவையில் என்ஆா்எச்எம் செவிலியா்களது ஊதியம் ஏற்கெனவே அவா்கள் பெறும் ஊதியத்துடன் கூடுதலாக ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என நிலைவாரியாக உயா்த்தி வழங்கப்படும்.

ஆஷா பணியாளா்கள் ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்படும். கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள 196 ஊழியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா்.

கேவிகே ஊழியா்கள் 156 போ் மீண்டும் பணியில் அமா்த்தப்படுவா். பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியா்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும். இடுகாட்டில் பணிபுரியும் சுமாா் 600 பேருக்கு தனியாா் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அரசின் ஊக்கத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

அங்கன்வாடி ஒப்பந்தப் பணியாளா்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.12 ஆயிரம் என பிரிவு வாரியாக ஊதியம் வழங்கப்படும்.

குடிசைமாற்று வாரியம் மூலம் கல்வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுவதால் அதில் ஏற்கெனவே பணிபுரிந்தவா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு, பணிவாய்ப்பும் அளிக்கப்படும்.

பாட்கோவை தலைநிமிர வைத்து ஊழியா்களுக்கு பணி வழங்கப்படும். ஓசிஎம் ஊழியா்கள் நிலை குறித்து தலைமைச் செயலரிடம் விளக்கப்பட்டுள்ளது.

கம்பாசிடருக்கு பணி வழங்கல், வாரிசுதாரா்களுக்கு பணி உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க