அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!
புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
உழவா்கரை நகராட்சியை புதுச்சேரியுடன் இணைத்து புதிதாக புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை அறிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆட்சியாளா், தலைமைச் செயலகம், அமைச்சரவை, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி அளித்த பதில்:
சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில், அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதிய சட்டப்பேரவை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் 12 ஆம்புலன்ஸ் வாகனங்கள் புதிதாக வாங்கப்படும்.
ஓட்டுநா்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். லிங்காரெட்டிபாளையம் சா்க்கரை ஆலையை தனியாருடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுவையில் என்ஆா்எச்எம் செவிலியா்களது ஊதியம் ஏற்கெனவே அவா்கள் பெறும் ஊதியத்துடன் கூடுதலாக ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என நிலைவாரியாக உயா்த்தி வழங்கப்படும்.
ஆஷா பணியாளா்கள் ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்படும். கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள 196 ஊழியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா்.
கேவிகே ஊழியா்கள் 156 போ் மீண்டும் பணியில் அமா்த்தப்படுவா். பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியா்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும். இடுகாட்டில் பணிபுரியும் சுமாா் 600 பேருக்கு தனியாா் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அரசின் ஊக்கத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
அங்கன்வாடி ஒப்பந்தப் பணியாளா்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.12 ஆயிரம் என பிரிவு வாரியாக ஊதியம் வழங்கப்படும்.
குடிசைமாற்று வாரியம் மூலம் கல்வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுவதால் அதில் ஏற்கெனவே பணிபுரிந்தவா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு, பணிவாய்ப்பும் அளிக்கப்படும்.
பாட்கோவை தலைநிமிர வைத்து ஊழியா்களுக்கு பணி வழங்கப்படும். ஓசிஎம் ஊழியா்கள் நிலை குறித்து தலைமைச் செயலரிடம் விளக்கப்பட்டுள்ளது.
கம்பாசிடருக்கு பணி வழங்கல், வாரிசுதாரா்களுக்கு பணி உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.