செய்திகள் :

புதுச்சேரி: ``2026 தேர்தலில் தமிழ்நாட்டிலும் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும்!'' -முதல்வர் ரங்கசாமி

post image

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முதல்வர் ரங்கசாமி, 2011-ல் தனிக்கட்சி தொங்கி ஆட்சியைப் பிடித்தார். 2016 தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியப் பறிகொடுத்த அவர், 2021-ல் பா.ஜ.க கூட்டணியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இன்று கட்சியின் 15-வது ஆண்டு விழா என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

முதல்வர் ரங்கசாமி

அதையடுத்து அலுவலகத்தில் இருந்த தன்னுடைய குருவான அப்பா பைத்தியம் சாமிகளின் படத்திற்கு பூஜை செய்தார். தொடர்ந்து பேசிய அவர், ``கடந்த ஆட்சியில் அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அதனால் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அரசுப் பணியிடங்களை நிரப்பி வருகிறோம்.

எம்.எல்.ஏ-க்களிடம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என வேறுபாடு இல்லாமல் மாநில வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறோம். கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதற்கென குழு அமைத்து 11 தொகுதிகளுக்கு தற்போது நிர்வாகிகளை நியமித்திருக்கிறோம்.

முதல்வர் ரங்கசாமி

மற்ற தொகுதிகளுக்கும் விரைவில் நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறோம். காமராஜர் அவர்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் கருத்தாகக் கொண்டு செயல்படுகிறோம். இனியும் செயல்படுவோம். அப்பா பைத்தியம் சாமிகள் ஆசியால் நல்லாட்சி நடைப்பெற்று வருகிறது. என்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடும்." என்று தெரிவித்தார்.

Illegal Immigrants: 2009 முதல் எத்தனை இந்தியர்களை US வெளியேற்றியிருக்கிறது? அமைச்சர் வெளியிட்ட தரவு

டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டின் ராணுவ விமானங்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பியனுப்பிவருகிறார். அந்த வகையில், அம... மேலும் பார்க்க

``பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எங்கும் பாலியல் கறைகள்... அல்வா சாப்பிடும் முதல்வர்" -சீமான் கண்டனம்

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆளும் திமுக அரசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தல்கள் வ... மேலும் பார்க்க

Maharashtra: ``வயது வந்த மக்களை விட வாக்காளர் எண்ணிக்கை அதிகமானது எப்படி?'' -ராகுல் காந்தி கேள்வி

மகாராஷ்டிரா மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டியிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையின் மாநிலத்தின் மொத்த வயதுவந... மேலும் பார்க்க

``பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை செய்தால் இனி இதுதான் தண்டனை...!'' -அன்பில் மகேஸ் எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல திருச்சியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: கட்டுமஸ்தான உடல், வயது குறைவு... நன்றாக இருந்தவர்கள் திடீரென உயிரிழப்பது ஏன்?

Doctor Vikatan: "நல்ல கட்டுமஸ்தான உடம்பு, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை... வயசு 45 தான், 55 தான் பொசுக்குனு செத்துட்டார்' என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம். இப்படி உடலை ஃபிட்டாக வைத்திருந்தாலும், திடீ... மேலும் பார்க்க

Health: அல்சர், தொப்பை, ரத்த விருத்தி, சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு..!

அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை 'சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராள நன்மைகள் உண்டு. இதன் ஒப... மேலும் பார்க்க