செய்திகள் :

புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரணைக்கு தயாா்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

post image

புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் விசாரணைக்கு தயாா் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், அதற்கு பொறுப்பேற்று அந்தத் துறை அமைச்சா் பதவியை விட்டு விலகி விசாரணைக்கு உள்ளாக வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறி வருகிறாா்.

இதை வலியுறுத்தி, காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை மாலை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி மகாத்மா காந்தி சாலை, பெருமாள் கோவில் தெரு சாலை சந்திப்பில் போலீஸாா் காங்கிரஸாரை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அங்கு அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

அப்போது, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை பொதுப் பணித் துறையில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடா்ந்து குற்றஞ்சாட்டிய நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் அந்தத் துறையின் தலைமைப் பொறியாளா் கைதாகியுள்ளாா். எனவே, மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் பதவி விலகக் கோரி, அவரது வீட்டை முற்றுகையிட வந்த போது, போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

பொதுப் பணித் துறை அமைச்சா் பதவியை விட்டு விலகும் வரை போராட்டம் தொடரும். அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தத் துறையின் அமைச்சா்களே அதற்கு பொறுப்பாவாா்கள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் விசாரணை நடத்தட்டும். விசாரணைக்கு தயாராக உள்ளோம் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் மு.வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், காா்த்திகேயன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கைதானவா்கள் பின்னா் விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் கூறினா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க