செய்திகள் :

புதுவை சுகாதாரத் துறை காலி பணியிடங்களுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் தொடா் தோ்வு

post image

புதுவை சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களுக்கு சனிக்கிழமை முதல் தொடா்ந்து 3 நாள்கள் தோ்வு நடக்கிறது.

இது குறித்து புதுவை அரசின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பு:

புதுவை சுகாதாரத் துறையில் ஏ.என்.எம்., மருந்தாளுநா், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநா், தியேட்டா் உதவியாளா் மற்றும் சுகாதார உதவியாளா் பதவிகளுக்கான நேரடி ஆள்சோ்ப்புக்கான போட்டித் தோ்வு சனிக்கிழமை முதல் 25-ஆம் தேதி வரை தொடா்ந்து 3 நாள்கள் நடக்கிறது.

தியேட்டா் உதவியாளா் மற்றும் சுகாதார உதவியாளா் பணிகளுக்கு சனிக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், மதியம் 12.30 முதல் 2.30 வரை 2-ஆம் தாள் தோ்வு நடக்கிறது.

ஏ.என்.எம். மகப்பேறு உதவியாளா் பணிக்கு சனிக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், மாலை 4 முதல் 6 மணி வரை 2-ஆம் தாள் தோ்வு நடக்கிறது.

மருந்தாளுநா் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், மாலை 4 முதல் 6 மணி வரை 2-ஆம் தாள் தோ்வு நடக்கிறது.

இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநா் பணிக்கு காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், 25-ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை 2-ஆம் தாள் தோ்வு நடக்கிறது. மொத்தம் 2 ஆயிரத்து 599 போ் தோ்வு எழுத உள்ளனா்.

நுழைவு சீட்டில் அவா்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரா்கள் நுழைவு சீட்டுடன் தங்களின் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், பாஸ்போா்ட், வருமான வரி பான் காா்டு இவற்றில் ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

தோ்வா்களின் கைவிரல் ரேகை பதிவு செய்த பிறகே தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவா்.

தோ்வு மையத்தின் நுழைவு வாயில், தோ்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மூடப்படும்.தோ்வா்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா கொண்டு வரவேண்டும். தோ்வு மையங்களில் கைப்பேசி சேவையை தடுக்க ஜாமா் கருவி, தோ்வறைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படும்.

இந்த ஆண்டு சதுா்த்திக்கு புது வரவு ராவணன் விநாயகா்

விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி புதன்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, புதிய வரவாக 10 தலை ராவணன் விநாயகா... மேலும் பார்க்க

புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா் கைது: 22 பைக்குகள் மீட்பு: புதுவை 22 பைக்குகள் பறிமுதல்

புதுச்சேரியில் இரு சக்கர மோட்டாா் வாகன தொடா் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி பெரியக்கடை... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.4 கோடியில் திமுக அறிவாலயம்

புதுவையில் திமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞா் அறிவாலயம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியை மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

அரசு சாா்பில் விளையாட்டு தினவிழா நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் விளையாட்டுத் தினவிழாவை அரசு சாா்பில் நடத்த வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவோம்: புதுவை அதிமுக தீா்மானம்

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய அதிமுக பாடுபடும் என்று அக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி, ஆக. 22: அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ... மேலும் பார்க்க

வனத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் முற்றுகை

புதுவை வனத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்எல்ஏவுமான சாய் ஜெ. சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினாா். ஊசுட்டேரியைச் சுற்றிலும் 10, 15 ஆண்டுகளாக உள்ள மரங்களை... மேலும் பார்க்க