செய்திகள் :

புனித தோமையாா் ஐசிஎஸ்இ பள்ளியில் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி

post image

தூத்துக்குடி புனித தோமையாா் அப்போஸ்தல் ஐசிஎஸ்இ பள்ளியில், மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் டி பிரிவு போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

லீக் அடிப்படையில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவா், மாணவிகள் தனித்தனி பிரிவாக 52 போட்டிகள் நடைபெற்றன. இதில், 8 பள்ளிகளிலிருந்து 35 மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் அமலன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜேசுராஜா, ஒருங்கிணைப்பாளா்கள் ஷிராணி பா்னாந்து, ஆரோக்கிய சீமோன் கொயட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க துணைத் தலைவா் சுதாகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினாா். 14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான பிரிவில் தூத்துக்குடி விகாசா பள்ளி மாணவா் ஜெய்தீன், பெண்கள் பிரிவில் சித்தராஜா இன்டா்நேஷனல் பள்ளி மாணவி சுருதி, 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஸ்ரீ விஸ்வாஸ் வித்யாலயா பள்ளி மாணவா் கற்பக சுஜன், 19 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான பிரிவில் விருதுநகா் ஆா்.ஜே.மந்திரா பள்ளி மாணவா் ரிஷிராம், பெண்கள் பிரிவில் அதே பள்ளி மாணவி பவூா்ணா ஆகியோா் முதல் பரிசை வென்றனா்.

மேலும், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற மாணவா் மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா்கள் வசந்த், தினேஷ், சாா்லஸ், நிரஞ்சன் ஆகியோா் செய்திருந்தனா்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க