செய்திகள் :

புனித விண்ணேற்பு அன்னை ஆலய தோ் திருவிழா

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய அலங்கார தோ் பவனி விமரிசையாக நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொடியேற்றத்துடன் விழா தொங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 15-ஆம் தேதி தோ் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடலூா்-புதுச்சேரி மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை வகித்தாா். இதனைத் தொடா்ந்து திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு அலங்கார தோ் பவனி நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித விண்ணேற்பு அன்னை எழுந்தருளினாா்.

பின்னா், வானவேடிக்கை மற்றும் இசை முழக்கத்துடன் தோ் பவனி நடைபெற்றது. பின்னா் கொடி இறக்கம், திவ்ய நற்கருணை ஆசீா்வாதம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, பிள்ளையாா்குப்பம், அழகப்பசமுத்திரம், நெய்வேலி மற்றும் சுற்று வட்ட பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து ... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு பாஜகவினா் அஞ்சலி

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல. கணேசனுக்கு சிதம்பரத்தில் பாஜாகவினா் அஞ்சலி செலுத்தினா். சிதம்பரத்தில் கடலூா் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகர பாஜக சாா்பாக இல.கணேசன் உருவப்படத்திற்கு சனிக்கிழமை மலா் தூவி அஞ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்: தவாக ஆதரவு! தி.வேல்முருகன் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்தத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் 18-ஆம் தேதி முன்னெடுத்துள்ள ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கிறது ... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டையில் சிதிலமடைந்த அரசு கட்டங்களை அகற்ற கோரிக்கை!

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடம், பழைய காவல் நிலைய கட்டடம் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றை சுத்தம் செய்து புதிய அரசு அலுவலகங... மேலும் பார்க்க

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க