செய்திகள் :

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் மூவர் பலி; மன்னிப்பு கேட்ட ஒடிஷா முதல்வர்

post image

இன்று (29.06.2025) ஒடிஷாவில் நடைபெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட நெருக்கடியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

பசந்தி சாஹு, பிரேமகாந்த் மொகந்தி மற்றும் பிரவதி தாஸ் ஆகிய மூவரும் மூச்சு திணறலால் உயிரிழந்ததாக சட்ட அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் கூறியுள்ளார். இந்த விவகாரம் ஆழமாக விசாரிக்கப்பட்டு, உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை நான்கு மணியளவில் பூரியில் உள்ள ஶ்ரீ கண்டிச்சா கோவில் அருகே, ரதத்தில் மூன்று தெய்வங்கள் திறக்கப்படும் நிகழ்ச்சியைக் காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.

அந்த தருணத்தில் புனிதமாக கருதப்படும் சாரமாலா மரத்தை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகள் நிகழ்ச்சி நடந்த இடத்தில் நுழைந்ததால் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குள் அனைவரையும் பயம் பீடித்துள்ளது.

அந்த இடத்தில் இருந்த ஒருவர் கூட்டத்தை சரியாக கையாளவில்லை என இந்துஸ்தான் டைம்ஸ் தளத்துக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். விஐபிகளுக்கு தனி நுழைவு வாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், பொது மக்கள் தூரத்தில் இருந்தே கோயிலை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Stampede
Stampede

அத்துடன், மக்கள் உள் நுழையும் வாயில் வழியாக வெளியேற ஆரம்பித்ததால் நெரிசல் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பூரி டிசிபி பிஷ்ணு சரண் பதி மற்றும் போலீஸ் கமாண்டன்ட் அஜய் பதி ஆகியோரை இடைநீக்கம் செய்துள்ளார் முதலமைச்சர் மோகன் சரண் மாஜி. மேலும், பூரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் எஸ் ஸ்வைன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பினித் அகர்வால் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மோகன் சரண், இது பொருத்துக்கொள்ள முடியாத அலட்சியம் என்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு மாநில அரசு சார்பில் மன்னிப்புக் கேட்டதாகவும் பிடிஐ செய்திதளம் தெரிவிக்கிறது.

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்; கதவு திறந்து நோயாளியுடன் நடுரோட்டில் விழுந்த ஸ்ட்ரெச்சர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். குன்னூர் நகரின் நுழைவு... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: மலையிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பஸ்; 10 பேர் மாயம், 3 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையில் ஏராளமான கோயில்கள் இருக்கிறது. இக்கோயில்களுக்கு தினமும் வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். மலைப்பாதை மிகவும் குறுகலாகவும், வளைவுகள் நிற... மேலும் பார்க்க

நெல்லை: மீட்புப் பணியில் காவலர் மரணம்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; நிவாரணம் அறிவித்த முதல்வர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பத்து செங்கல்சூலையில் பணிபுரியும் செய்யதுங்கநல்லூர் மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 18ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் தனது இருசக்கர வா... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம்; அதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை; தானியங்கி கதவு எப்போது?

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, மும்பை ரயில்வே-க்... மேலும் பார்க்க

தென்காசி: கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்; மருத்துவமனையில் 3 மாணவர்கள்; அரசு சொல்வது என்ன?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின், பின்புற ஆக்சில் உடைந்ததில், சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயங்களுடன்... மேலும் பார்க்க

``ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' - விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது. கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க