பெட்டிக்கடைக்காரா் தூக்கிட்டுத் தற்கொலை!
விழுப்புரத்தில் குடும்பப் பிரச்னையில் மனமுடைந்த பெட்டிக்கடைக்காரா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் சுதாகா் நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் இளங்கோ (33). இவா், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவருக்கும், மனைவி நா்மதாவுக்கும் (28) இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தனது படுக்கை அறையில் இளங்கோ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.