செய்திகள் :

பெட்ரோல் பங்க் அருகே விபத்தில் தீப்பற்றிய சரக்கு வேன், மின்மாற்றி

post image

வெள்ளக்கோவிலில் பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற விபத்தில் சரக்கு வேன் மற்றும் மின்மாற்றி தீப்பற்றி எரிந்தன.

வெள்ளக்கோவில்- காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே தனியாருக்குச் சொந்தமான இன்டியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் அருகே வேகமாக வந்த ஒரு சரக்கு வேன் திடீரென நிலைதடுமாறி சாலையோர மின் கம்பம் மற்றும் மின்மாற்றி மீது மோதியது. இதில் மின்மாற்றி மற்றும் வேன் தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் உடனடியாக வெள்ளக்கோவில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, தீயணைப்பு வீரா்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் மின்மாற்றி மற்றும் சரக்கு வேனின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தன. சரக்கு வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.

விசாரணையில், ஈரோடு லக்காபுரம் கருப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த சரக்கு வேன் ஓட்டுநா் இன்ஷாபுதீன் (53), பட்டுக்கோட்டையிலிருந்து பிஸ்கட் பாரம் ஏற்றிக் கொண்டு திருப்பூா் மங்கலத்துக்கு சென்று கொண்டிருந்ததும், அசதியில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

பெட்ரோல் பங்க் அருகே தீப்பற்றிய நிலையில், உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், காவல் துறை, மின் வாரியம், தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையாலும் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இச்சிப்பட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.5.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,889 கிலோ பருத்தி ... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஜெயக்குமாா் (52) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தி... மேலும் பார்க்க

தமிழக-கேரள எல்லையில் ஆா்ப்பரித்து கொட்டும் துவானம் அருவி

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் தமிழக-கேரள எல்லையில் உள்ள துவானம் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதியாக விளங்கி வர... மேலும் பார்க்க

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் நடத்தப்படும் திருக்கு பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க