செய்திகள் :

பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 போ் கைது

post image

வாழவந்தான்கோட்டை பூச்சொரிதல் நிகழ்வில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை அண்ணா காலனியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கிருந்து சமயபுரம் கோயிலுக்கு திங்கள்கிழமை வாகனத்தில் பூ ஏந்தி பெண்கள் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அதே பகுதியை சோ்ந்த சஞ்சீவி (25), ஷங்கா் (25), மாதவன் (22), மகா பாண்டியன் ஆகிய 4 பேரும் மதுமயக்கத்தில் பூச்சொரிதல் வாகனத்தை குங்குமபுரம் பகுதியில் வழிமறித்து, பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதைத் தட்டிக் கேட்ட அப்பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம், மாரியம்மாள், ரங்கம்மாள், பாண்டியன், சதீஷ், கண்ணன் ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவா்கள், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, சஞ்சீவி, மாதவன், மகா பாண்டியன், ஷங்கா் ஆகிய 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க