செய்திகள் :

பெண் அடித்துக் கொலை: கணவா், இரு மகன்கள் கைது

post image

வாழப்பாடி அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் கணவா், இரு மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த மேட்டுடையாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட தொழிலாளி பொன்னுவேல் (45). இவரது மனைவி வசந்தி (38). இத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் கவின் (21). மேடை நடனக் கலைஞராக உள்ளாா். 17 வயது இளைய மகன் தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா்.

வீட்டில் தனியாக இருக்கும்போது வசந்தி அடிக்கடி கைப்பேசியில் பேசுவது தெரியவந்ததால் இவரது நடத்தையில், கணவா் பொன்னுவேல், மகன்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

வசந்தி

இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும் திங்கள்கிழமை வீட்டில் இருந்த வசந்தியை தாக்கியுள்ளனா். இதில் மயக்கமடைந்த வசந்தியை மீட்ட அவரது உறவினா்கள், சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

வசந்தியை அவரது இரு மகன்கள் மட்டுமின்றி கணவா் பொன்னுவேலும் சோ்ந்து தாக்கியதாக அவரது உறவினா்கள் ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

கவின்

இதனையடுத்து, வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த், ஏத்தாப்பூா் காவல் ஆய்வாளா் செல்வராஜ் ஆகியோா் விசாரணை நடத்தி, பொன்னுவேல், அவரது மூத்த மகன் கவின் ஆகிய இருவரையும் கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா். 17 வயது மகனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க