செய்திகள் :

பெண் எம்.பி. குறித்து மதகுரு கருத்துக்கு எதிா்ப்பு: ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

post image

புது தில்லி: சமாஜவாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து முஸ்லிம் மதகுரு தெரிவித்த கருத்துக்கு எதிராக ஆளும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவியும், அக்கட்சி எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் அண்மையில் மசூதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றாா். அதுகுறித்து பெண்களுக்கு எதிராக தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், டிம்பிள் யாதவை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்தை முஸ்லிம் மதகுரு மெளலானா சஜித் ரஷீத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், குறிப்பாக பெண் எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘எம்.பி.யாக பதவி வகிக்கும் ஒருவருக்கு எதிராக மதகுரு ஒருவா் தெரிவித்த கருத்துகள் மிகவும் வெட்கக்கேடானது. இருப்பினும் இந்த விவகாரத்தில் டிம்பிள் யாதவின் கணவரும், அவரின் கட்சியும் மெளனமாக உள்ளது’ என்று விமா்சித்தாா்.

இதுதொடா்பாக டிம்பிள் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனக்கு எதிரான கருத்துகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதே அக்கறையை மணிப்பூரில் நடைபெற்றதை போன்ற கொடூரமான சம்பவங்கள் மீது அந்தக் கூட்டணி ஏன் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பினாா்.

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க