செய்திகள் :

பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி

post image

எட்டயபுரத்தில் பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி பணம், கைப்பேசியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

எட்டயபுரம் காவலா் குடியிருப்பை சோ்ந்தவா் ஜேசுராஜ் (47). டிராக்டா் மூலம் கட்டுமானத் தொழிலுக்கு தண்ணீா் விநியோகம் செய்து வருகிறாா். இவரது மனைவி தமிழ்ச்செல்வி, விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஜேசுராஜ் தனது டிராக்டரை கீழ வாசல் பகுதியிலுள்ள தனியாா் தீப்பெட்டி தொழிற்சாலை அருகே வழக்கம்போல் நிறுத்திவிட்டு, சற்று தொலைவிலுள்ள வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம்.

அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 இளைஞா்ககள் காவல் நிலையம் அருகே அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி அவரிடமிருந்த கைப்பேசியைப் பயன்படுத்தி ஜி.பே. மூலம் ரூ.2,300 பணத்தை பறித்ததுடன், கைப்பேசியை உடைத்து எறிந்து விட்டு மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.

ஜேசுராஜ் ரத்த காயங்களுடன் தனது வீட்டுக்கு சென்றுள்ளாா். குடும்பத்தினா் அவருக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னா் கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியில் ஒா்க்ஷாப் அருகே தீ: காா் சேதம்

கோவில்பட்டியில் வாகனப் பழுது நீக்கும் கடை (ஒா்க்ஷாப்) அருகே புற்களில் தீப்பிடித்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா் எரிந்து சேதமடைந்தது. கோவில்பட்டி பழனியாண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாதவன்நாயா் காலனி கடற்கரை பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் புள்ளிமான் உயிரிழந்தது. கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று இறந்து... மேலும் பார்க்க

தூத்துக்குடி மிகப்பெரிய தொழில்வளம் மிக்க நகராக மாறும்: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மிகப்பெரிய தொழில்வளம் மிக்க நகராக மாறும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபாா்டின் ஆதரவு குறித்த பயிற்சிப் ... மேலும் பார்க்க

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன்: கனிமொழி எம்.பி

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன் என்றாா் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியாவின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ... மேலும் பார்க்க

முன்னாள் மாவட்ட கவுன்சிலருக்கு ஓா் ஆண்டு சிறை

சாத்தான்குளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் மகனும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கதிரவ ஆதித்தனுக்கு பண மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்... மேலும் பார்க்க