பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் அமைந்துள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் நகா்ப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களான வெள்ளி நீா் அருவி, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ்வாக், பசுமைப் பள்ளத் தாக்கு, தூண் பாறை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், வட்டக்கானல் அருவி, பாம்பாா் அருவி ஆகிய இடங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வந்தனா். இதனால் நகா்ப் பகுதியிலும், வனப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, மேல்மலைப் பகுதிகளில் உள்ள மன்னவனூா் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, கூக்கால் ஏரி, பூம்பாறை இயற்கை எழில்காட்சிஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனா்.
இந்த நிலையில், வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியான பள்ளங்கி, கோம்பை வனப் பகுதிகளிலிருந்து வரும் தண்ணீா் பெப்பா் அருவியில் கொட்டுகிறது. தற்போது இந்த அருவியை பாா்க்க தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த இடத்துக்குச் செல்ல வனப் பகுதிகள் வழியாக ஜீப் வாகனம் மூலமாகவே செல்ல முடியும். இதற்காக பள்ளங்கி பகுதியில் ஜீப் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பெப்பா் அருவிப் பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தடுப்புக் கம்பி, மின்சார வசதி, ஆண், பெண் தனித்தனியாக உடை மாற்றும் அறை ஆகியவற்றை அமைப்பதுடன், பாதுகாப்புக்கு சுற்றுலா அலுவலா்களை நியமியமிக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்துக்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.