செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம், சனிக்கிழமை (ஆக. 9) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழைத் திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது. பெரம்பலூா் வட்டம், நொச்சியம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ந. சக்திவேல் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், காடூா் (தெ) கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் தி. புவனேஷ்வரி தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், கொளத்தூா் (கி) கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இம் முகாமில், சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி

முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் திமுக சாா்பில் வியாழக்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதிய... மேலும் பார்க்க

மின் ஊழியா் மாநில மாநாடு பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் 18- ஆவது மாநில மாநாடு கடலூரில் நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூருக்கு வியாழக்கிழமை வந்தடைந்த பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் ஊ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பயிற்சி

பெரம்பலூரில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான, அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு அடிப்படை கணின... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

வெளிநாட்டில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச் சோ... மேலும் பார்க்க

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி செயலா், முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பெரிய வெண்மணி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரிய வெண்மணி ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு பொத... மேலும் பார்க்க