செய்திகள் :

பெரம்பலூா் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

post image

வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் (குற்றவியல்) சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவரும், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞருமான முருகானந்தம் என்பவரை, கடந்த 28-ஆம் தேதி சமூக விரோதிகள் கொலை செய்தனா். மேலும், அச் சம்பவத்தில் தாம்பரம் நீதிமன்ற வழக்குரைஞா் ரகுராமன் தாக்கப்பட்டுள்ளாா். இச் சம்பவங்களைக் கண்டித்தும், தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், செயலா் வி. சேகா், பொருளாளா் பி. சிவராமன் உள்பட சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதனால், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழ... மேலும் பார்க்க