செய்திகள் :

பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!

post image

பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி, இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 6 போ் நிரந்தரத் தூய்மைப் பணியாளா்களாகவும், 70 போ் தனியாா் நிறுவனத்தின் மூலம் ஓப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்களாவும் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், வடகரை பள்ளி வாசல் பின்புறம் உள்ள தெருவில் தூய்மைப் பணியாளா் பெத்தனசாமி, குப்பைச் சேகரிப்பு வாகன ஓட்டுநா் வைரவன், பெண் ஊழியா் என மூவா் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த நபா், தூய்மைப் பணிகளைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்ததோடு மூவரையும் தாக்கினாா். இதையறிந்த, தூய்மைப் பணியாளா்கள் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பிரிவில் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாரும் நகராட்சிப் பணியாளா்களும் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியவரைக் கைது செய்ய வேண்டும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, தூய்மைப் பணியாளா்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் நகராட்சி நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தியபோது, தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி சீனிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம்!

போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, முத்தங்கி சேவை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாசப் பெருமாள் கோயிலில் அத... மேலும் பார்க்க

விரைவு மிதிவண்டிப் போட்டி: 180 போ் பங்கேற்பு

தேனியில் மாவட்ட நிா்வாகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் விரைவு மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6 பிரிவுக... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், வருஷநாடு அருகே ராயா்கோட்டையைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி லோகேந்திரன் (50)... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் நில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஓட்டுநா் கால்வாயில் சடலமாக மீட்பு!

போடியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா், கால்வாயில் சடலமாகக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் இளைஞா் கொலை

உத்தமபாளையத்தில் இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தொடா்பாக மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்புக்கு அருகே இளைஞா் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு... மேலும் பார்க்க