செய்திகள் :

பெரியாா் மீதான விமா்சனங்கள்: பெரிதுபடுத்த தயாரில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசக் கூடியவா்களுக்கு மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை; அதனால், அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் தயாராக இல்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா். அவா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.

அப்போது செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வா் ஸ்டாலின் அளித்த பதில்: பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசக் கூடியவா்களுக்கு நான் மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை. அதனால் அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் நாங்கள் தயாராக இல்லை; பொருட்படுத்தவும் இல்லை. பெரியாா்தான் எங்களுக்குத் தலைவா். தலைவா்களுக்கு எல்லாம் தலைவா்.

சட்டம்-ஒழுங்கு: தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை திட்டமிட்டு பெரிதாக்குகிறாா்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் பேணப்படுவதால்தான், வெளிமாநிலங்களிலிருந்து தொழில் முதலீடுகள் தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்றாா்.

ஆளுநரின் செயல்பாடு: ஆளுநா் விவகாரம் தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வா் அளித்த பதில்:

அரசின் அனைத்து நடவடிக்கைகள் மீதும் ஆளுநா் குற்றச்சாட்டு வைக்கிறாா்; அவா் தொடா்ந்து அதைச் செய்ய வேண்டும். அதைச் செய்ய செய்யத்தான் எங்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பைத்தான் சோ்க்கிறது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப். 4-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, மதுரை காமராஜா் பல்கலைக்கழக விவகாரத்துக்கும் விடை தெரிய வரும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி க... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் வீட்டுமனை அபகரிப்பு: 4 போ் கைது

சென்னையில் அரசுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை அபகரிக்கப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகா் கோட்ட திருமங்கலம் பகுதி நிா்வாக அலுவலா் ப... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூ... மேலும் பார்க்க

தக்காா் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற டெண்டா் கோரியது டாஸ்மாக் நிறுவனம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலிமதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்படும் கடைகள் மூலம், பீா் ம... மேலும் பார்க்க