செய்திகள் :

பெஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை ஓட்டி மரணம்!

post image

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை சவாரி செய்பவர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்கச் சுற்றுலாப் பயணிகள் தத்தளித்தபோது குதிரை சவாரி செய்யும் ஒருவர் பயங்கரவாதிகளில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்று அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.

பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் குதிரை சவாரி தொழில் செய்துவந்தவர் சையத் அடில் ஹூசேன் ஷா. இவர் சம்பவத்தன்று துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்து, தாக்குதலை முறியடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பயங்கரவாதியின் துப்பாக்கிச்சூட்டில் குண்டு அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹூசேன் ஷா அவரது வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகள் என குடும்பமே அவரது வருமானத்தை நம்பியே பிழைத்து வந்தனர். இந்தநிலையில் ஹூசேனின் மரணம் குடும்பத்தையே நிலை குலுங்க வைத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதலில் என் மகனை இழந்துவிட்டேன். மகனின் மரணம் குடும்பத்திற்கே பேரிழப்பாக மாறியுள்ளது என்று அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

மகனின் மரணம் குறித்து அவரது தந்தை சையத் ஹைதர் ஷா கூறுகையில்,

என் மகன் வழக்கம்போல் நேற்று மாலை 3 மணியளவில் பெஹல்காமுக்கு வேலைக்காகச் சென்றிருந்தான். தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டு அவனைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவனின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. மீண்டும் மாலை 4.40 மணிக்கு அவனது தொலைபேசி இயக்கப்பட்டது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. உடனே நாங்கள் காவல் நிலையத்திற்கு விரைந்தோம். அப்போதுதான் தாக்குதலில் அவன் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.

குதிரை ஓட்டியின் மரணம் அந்த குடும்பத்தைப் பெருமளவில் பாதித்துள்ளதோடு, குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆள்மாறாட்டம் மூலம் 5.3 மில்லியன் டாலர் வருவாய்!

தற்போதைய உலகில் தொழில், கல்வி, பொழுதுபோக்கு என அனைத்திலும் செயல் நுண்ணறிவின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காணொலி மூலம் நடத்தப்படும் தேர்வுகள், நேர்காணல்கள், விற்பனை அழைப்புக... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை; ரத்து செய்த அமெரிக்கா?

ரஷியா - உக்ரைன் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறவிருந்த நிலையில், கடைசி தருணத்தில் ரத்து செய்யப்பட்டது. ரஷியா - உக்ரைன் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை, மாஸ்கோவ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

ஜம்மு-காஷ்ரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதல் உயிரிழந்தோருக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நிவாரணம் அறிவித்துள்ளார். பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்

காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.மேலும், பாகிஸ்தான் எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று அவர் விளக்க... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது. 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல்

ஆஸ்திரோலியாவில் பொதுத் தோ்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் மறைவைத் தொடா்ந்து பல்வேறு தோ்தல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் வழக்கமான பரபரப்பு இல்லாமல்... மேலும் பார்க்க