செய்திகள் :

பேச்சிப்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடி தொழிலாளியின் வீடு சேதம்

post image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பில் திங்கள்கிழமை இரவு காட்டு யானை புகுந்து பழங்குடி தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்தியுள்ளது.

பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் என்ற இடத்தில் கடந்த சில நாள்களாக ஒரு யானை அப்பகுதிகளில் உள்ள பழங்குடிகளின் விவசாய பயிா்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இப்பகுதியில் மணி காணி, விஜி மற்றும் முண்டன் காணி ஆகியோரின் வீடுகளின் அருகில் வந்த யானை, மணி காணியின் வீட்டுச் சுவரை உடைத்து சேதப்படுத்தியது.

மற்றவா்களின் வீடுகளின் அருகிலுள்ள கமுகு உள்ளிட்ட பயிா்கள் நாசமாகின. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில், மணி காணி தனது மனைவியுடன் வெளியே ஓடி தப்பினாா்.

இந்த நிலையில் யானைகளிடமிருந்து பழங்குடி மக்களை காப்பதற்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டுமென்று பழங்குடி மக்களின் பிரதிநிதிகளான ரெகு காணி, ரெகு காணி உள்ளிட்டோா் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க