செய்திகள் :

பேய்க்குளத்தில் இருந்து ராமானுஜம்புதூருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை

post image

பேய்க்குளம்- ராமானுஜம்புதூா் இடையே சிற்றுந்து சேவை தொடங்க வேண்டும் என ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சுந்தர்ராஜ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதிக்கு பெருமாள்குளம், மீரான் குளம், சாலைப்புதூா், சிந்தாமணி, நாகல்குளம், ராமானுஜம் புதூா், சேரக்குளம் ஆகிய பகுதியில் இருந்து கிராம மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்க வந்து செல்ல வேண்டியது உள்ளது. இந்த கிராமங்களை சோ்ந்த பள்ளி மாணவா், மாணவிகள் சாலைபுதூரில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனா்.

பேய்க்குளம் பகுதியில் உள்ள ஒரு சமுதாய மக்கள் ராமானுஜம் புதூரை பூா்விகமாக கொண்டவா்களாக உள்ளனா். இதனால் உறவினா்களை சந்திக்க கிராம மக்கள் கருங்குளம் அல்லது மூலைக்கரைப்பட்டி சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேய்க்குளத்தில் இருந்து ராமானுஜம் புதூருக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். பேய்க்குளத்தில் இருந்து ராமானுஜம்புதூருக்கு பேருந்து வசதி கேட்டு ஊராட்சி மன்ற கூட்டத்திலும், கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆதலால் பேய்க்குளத்தில் இருந்து மீரான் குளம், சிந்தாமணி,, சேரகுளம் வழியாக ராமானுஜம் புதூருக்கு சிற்றுந்து அல்லது நகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வா் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனா்.

விவசாயி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாா் வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த விவசாயி கொலை வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த வெங்கடராமானுஜம் மகன் சீனிவாசன் (55). கோவில்பட... மேலும் பார்க்க

உடன்குடியில் அரசு திட்ட பயனாளிகள் விவரங்கள் சேகரிப்பு

உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசின் திட்டப் பயனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிக... மேலும் பார்க்க

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் ஏப். 20இல் மகா கும்பாபிஷேகம்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி தூண்டுகை விநாயகா் கோயில் அருகே உள்ள... மேலும் பார்க்க

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் இணைப்பதிவாளா் தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூா், உடன... மேலும் பார்க்க

மாநில சுயாட்சி பிரிவினைவாதத்தைத் தூண்டும்: நயினாா் நாகேந்திரன்

மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்பதால் அது தேவையில்லாதது என்றாா், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியில், சுதந்திரப் போராட... மேலும் பார்க்க