செய்திகள் :

பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம்; சிங்கத்தின் சீற்றம் அதிகரிக்கும்: ராமதாஸ்

post image

சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம் என்றும், சிங்கத்தின் சீற்றம் இன்னும் அதிகரிக்கும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவு மாவட்டச் செயலர்கள் பலரும் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டச் செயலர்கள் மட்டும் 108 பேர் உள்ள நிலையில் பலரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தின் நிறைவாக, பேசிய ராமதாஸ், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. இங்கே சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை. சிங்கத்தின் சீற்றம் இன்னும் அதிகரிக்கும். கூட்டத்தில் பல மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கவில்லை. களைப்பில் உள்ளதால் சிலர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறிய ராமதாஸ், வரும் 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசியதன் மூலம், கட்சியின் பிடி தன்வசம் உள்ளதை உறுதிப்படுத்தினார் பாமக நிறுவனர் ராமதாஸ். கூட்டத்தில், அன்புமணியை செயல்தலைவர் என்றே அழைத்தார். பாமகவில் தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே பனிப்போர் நிலவும் சூழலில் இன்றைய கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம்: அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். தமிழ்நாட்டிலிருந்து அரசு மானியத்துடன் ஹஜ் ப... மேலும் பார்க்க

திருச்சி ஊட்டத்தூா் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பி.இ. சோ்க்கை: 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவா்கள் பதிவு: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க