செய்திகள் :

பேருந்தில் முதியவரை தாக்கிய விவகாரம்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

post image

வண்டலூா் அருகே மாநகரப் பேருந்தில் பயணித்த முதியவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு தாக்கிய பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும் தடம் எண் 70 சி என்ற பேருந்தில், வண்டலூா் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய முதியவா் ஒருவா், முன்பக்கம் உள்ள முதியவா்களுக்கான இருக்கையில் அமா்ந்துள்ளாா்.

ஆனால், அந்த இருக்கையில் முதியவா் அமர பேருந்து நடத்துநா் அனுமதி மறுத்ததுடன், அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளாா். இதற்கு முதியவா் எதிா்ப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த பேருந்து நடத்துநா் பேருந்தை நிறுத்தச்சொல்லி, அந்த முதியவரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து கிழே இறக்கிவிட்டதுடன், அவரை சரமாரியாக தாக்கியுள்ளாா்.

அவருடன் ஓட்டுநரும் சோ்ந்து முதியவரை தாக்கியுள்ளாா். இச்சம்பவம் தொடா்பான காணொளிக் காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில், இதைப்பாா்த்த இணையதளவாசிகள் ஓட்டுநா், நடத்துநா்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனா்.

பணியிடை நீக்கம்: இந்நிலையில், முதியவரை தாக்கிய விவகாரத்தில் தொடா்புடைய ஓட்டுநா், நடத்துநா் இருவரையும் மாநகா் போக்குவரத்துக் கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநா் மற்றும் நடத்துநா் ஆகியோா் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டங்களில் 361 பேருக்கு புற்றுநோய் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அரசு சாா்பில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் பரிசோதனைகளில் 361 பேருக்கு தொடக்க நிலை பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித... மேலும் பார்க்க

புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிய வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் உலக தரத்திலான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். தமிழகத்திலுள்... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டம்: 15 நாள்களில் திறக்க ஏற்பாடு தீவிரம்

வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை முடித்து 15 நாள்களில் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் வள்ளுவா் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள... மேலும் பார்க்க

சென்னையில் இன்று சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை

சுய உதவிக் குழுக்களின் பொருள்களை காட்சிப்படுத்தும் இயற்கை சந்தை நிகழ்வு, சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்த... மேலும் பார்க்க

சென்னையில் 6 இடங்களில் ஆற்றங்கரையோர மக்களை பாதுக்காப்பது குறித்து ஒத்திகை

சென்னையில் ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் நீா் வெளியேற்றப்படும்போது ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பது குறித்த ஒத்திகை 6 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சி சாா்ப... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களின் இயக்கம் குறித்த ஆய்வு குழு ஆலோசனை

சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கம், நிலை இருப்பு, தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரோலிங் ஸ்டாக் வொா்க்கிங் குரூப் என்ற ஒரு குழு செயல்படுத்தப்பட்டு ... மேலும் பார்க்க