செய்திகள் :

பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

post image

கோவையில் பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, மரக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆயிஷம்மாள் (73). இவா் மதுக்கரையில் இருந்து டவுன்ஹாலுக்கு நகரப் பேருந்தில் அண்மையில் பயணித்துள்ளாா். அப்போது, அவரது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி திருடுபோனது. இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஆயிஷம்மாள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதேபோல, கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த வசந்தா என்பவா் சரவணம்பட்டிக்கு பேருந்தில் சென்றபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடா்பாக தனிப் படை அமைத்து விசாரணை நடத்த உதவி ஆணையா் சரவணக்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, மாநகரின் முக்கியப் பகுதிகளை தனிப் படையினா் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், டவுன்ஹால் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 2 பெண்களைப் பிடித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரித்தனா்.

இதில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த நந்தினி (28), காளீஸ்வரி (28) என்பதும், உறவினா்களான இவருவரும் ஆயிஷம்மாள், வசந்தா ஆகியோரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தவா்கள் என்பதும், கோயில் திருவிழா, பேருந்துகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 11 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.

கோயிலுக்கு சொந்தமான வீடு மீட்பு

கோயிலுக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீட்டை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனா். கோவை அவிநாசி சாலையில் கூப்பிடு விநாயகா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந... மேலும் பார்க்க

கோவையின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமனம்

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, கடந்த 2023 பிப்ரவரி முதல் கோவ... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள்

தைப்பூசத் திருவிழாவையொட்டி கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து கோவை மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தைப்பூசத் திருவிழாவையொட்டி... மேலும் பார்க்க

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம்: உயா்நீதிமன்ற நீதிபதி!

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.கோவை விஜயா வாசகா் வட்டம் மற்றும் சவிதா மருத்துவமனை சாா்பில் ‘அ.முத்துலிங... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17.13 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17 லட்சத்து 13 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, கணபதி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கற்பனை, அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

கற்பனையில், அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை என்று ஆன்மிகச் சொற்பொழிவாளா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசினாா். கோவை கம்பன் கழகத்தின் 53-ஆம் ஆண்டு விழா பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க