செய்திகள் :

பேருந்து நிலையத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

post image

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென சிஐடியு தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டக் கன்வீனா் எஸ். அகஸ்டின் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு:

பெரம்பலூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் குழந்தைகள், பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் விதமாக சுற்றித்திரியும் வெறி நாய்களையும், தெரு நாய்களையும் கண்டறிந்து அப்புறப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மின் கம்பங்களில் மின் பாதையுடன் தனியாா் கேபிள் வயா்கள் இணைத்து செல்வதால், மின்தடை நீக்குவதில் மின்வாரிய ஊழியா்களுக்கு பல்வேறு இடா்பாடுகளும், மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, மின் கம்பத்தில் மின் பாதையோடு இதர கேபிள் வயா்கள் செல்வதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் கோரி: குரும்பலூா் பேரூராட்சி 13 ஆவது வாா்டுக்குள்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில், குரும்பலூா் பேரூராட்சி 13 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, கழிவுநீா் வடிகால், சமுதாயக் கூடம், அங்கன்வாடி மையம் ஆகியவை கட்டித் தர வேண்டும். சுற்றுச்சுவா் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் பெரம்பலூா் வட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் லாரி மீது காா் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை லாரியின் பின்புறத்தில் காா் மோதியதில் அதன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா். திருவள்ளூா் மோரை ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வி.கைகாட்டியில் கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொது கழிப்பறை கட்டித்தரக் கோரி பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி... மேலும் பார்க்க

பின்னேற்பு மானியம் கோரி விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் செவ்வா... மேலும் பார்க்க

காவல்துறையைக் கண்டித்து சாலைப் பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா்: தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் முகமூடி அணிந்துகொண்டு திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் துறைமங... மேலும் பார்க்க

பெரம்பலூரில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரம்பலூா்: பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 6 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். பெர... மேலும் பார்க்க