செய்திகள் :

பெரம்பலூரில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

post image

பெரம்பலூா்: பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 6 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் பாரதிதாசன் நகரில் உள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அருணாசலம் மகன் கணேசன் (59) என்பவா் தனக்கு சொந்தமான மளிகைக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கணேசனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து விமல் பாக்கு, பான் மசாலா உள்ளிட்ட பல்வேறு வகையான 6 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கணேசன் சிறையில் அடைக்கப்பட்டாா்.

காவல்துறையைக் கண்டித்து சாலைப் பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா்: தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் முகமூடி அணிந்துகொண்டு திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் துறைமங... மேலும் பார்க்க

பெரம்பலூா்: பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ. 1.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.பெரம்பலூா் மாவட்ட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா்: சென்னையில் தூய்மைப் பணியாளா்களை தாக்கிய காவல்துறையினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், சிஐடியு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு தனியாா் பள்ளி தாளாளா் இலவசமாக பள்ளிச் சீருடைகளை திங்கள்கிழமை வழங்கினாா். பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் அரசு ம... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க

விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள்! ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

பெரம்பலூா் நகரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். பெரம்பலூா் நகரின் வளா்ச்சிக்கேற்ப வாகனங்களின் ... மேலும் பார்க்க