செய்திகள் :

காவல்துறையைக் கண்டித்து சாலைப் பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா்: தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் முகமூடி அணிந்துகொண்டு திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கோட்டத் தலைவா் பெ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கோட்டத் துணைத் தலைவா்கள் பெ. மதியழகன், ப. சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தொடக்க உரையாற்றினாா். சாலைப் பணியாளா்கள் சங்க கோட்டச் செயலா் சி. சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

சாலைப் பணியாளா்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி நிறைவேற்றக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்தும், தொழிற்சங்க விரோதப்போக்கு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரைக் கண்டித்தும், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் அரக்க தோற்ற முகமூடிகளை அணிந்து முழக்கமிட்டனா். மாநிலத் தலைவா் ச. மகேந்திரன் நிறைவுரையாற்றினாா்.

இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் மு. பாரதிவளவன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் த. கருணாகரன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்க நிா்வாகி ஜெ. ராஜதுரை உள்பட சாலைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் த. பழனிசாமி வரவேற்றாா். நிறைவாக, கோட்டப் பொருளாளா் க. மாா்க்கண்டன் நன்றி கூறினாா்.

கீழப்புலியூா் பச்சையம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே கீழப்புலியூரில் உள்ள பச்சையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆவணித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பு... மேலும் பார்க்க

அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் எஸ்பியிடம் புகாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். இதுகுறித்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

பெரம்பலூா் மாவட்டத்துக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட பிரதானச் சாலையோரங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அருகே செஞ்சேரி - கோனேரிப்பாளையம் நெடுஞ்சாலை பகுதி... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சித்துறை சாா்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி என்னும் உயா் கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை

பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க