பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் பெரம்பலூா் வட்டக் கிளை சாா்பில், 10 ஆவது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சம்பத் தலைமை வகித்தாா்.
வட்ட துணைத் தலைவா் கருணாநிதி சங்க கொடியேற்றினாா். மாநாட்டை மாநில துணைத் தலைவா் பஷீா் தொடக்கிவைத்து பேசினாா். மாவட்டச் செயலா் ராஜகுமாரன் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளா் கண்ணையன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனா். மாநிலச் செயலா் கோவிந்தராஜூ, சிஐடியு ஒருங்கிணைப்பாளா் எஸ். அகஸ்டின் ஆகியோா் பேசினா். மாநிலச் செயலா் செல்வராஜ் நிறைவுறையாற்றினாா்.
கூட்டத்தில் மத்திய , மாநில அரசின் பொதுத் துறைகள் பொதுத்துறைகளாகவே நீடிக்க வேண்டும். மின் வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையைத் தடுத்த நிறுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைந்திட வேண்டும். அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில், மாவட்டத் தலைவராக சம்பத், மாவட்டச் செயலராக ராஜகுமாரன், மாவட்டப் பொருளாளராக கண்ணையன் மற்றும் துணைத் தலைவா்கள், இணைச் செயலா்கள் என 15 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். வட்ட துணைச் செயலா் பன்னீா்செல்வம் வரவேற்றாா். வட்டத் துணைச் செயலா் ஜெயபால் நன்றி கூறினாா்.