செய்திகள் :

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

post image

வாழப்பாடி: பேளூரில் மாரியம்மன் கோயில் ஊர்வலத்தின் போது கண்ணனூர் நகர் பகுதி இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணனூர் நகர் பகுதி மக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் வாழப்பாடி-பேளூர் பிரதான சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

வாழப்பாடி அருகே பேளூரில் மாரியம்மன் கோயில் திருவிழா இரு நாள்களாக நடைபெற்று வருகிறது. புதன்கிழமை இரவு அம்மன் திருவீதிவுலா நடைபெற்றது.

அப்போது, டிஜே இசைக்கு நடனம் ஆடுவதில் பேளுரை சேர்ந்த இளைஞர்களுக்கும் கண்ணனூர் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பேளூர் பகுதி இளைஞர்கள், கண்ணனூர் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுவாமி ஊர்வலத்தின் போது கண்ணனூர் நகர் பகுதி இளைஞர்களை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாழக்கிழமை காலை கண்ணனூர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வாழப்பாடி-பேளூர் பிரதான சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறைபிடித்து திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, மாணவிகள் உள்பட பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி போலீஸார், கோயில் ஊர்வலத்தின் போது கண்ணனூர் நகர் பகுதி இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

Kannanur Nagar residents block road demanding action against those who attacked Kannanur Nagar youth during Mariamman Temple procession in Belur

தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: உணவக உரிமையாளர் கைது

புது தில்லி: தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) புதன்கிழமை தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் 9 இடங்களில் அதிரடி ... மேலும் பார்க்க

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை சுமார் 6 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட... மேலும் பார்க்க

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், "நீ அரியணை ஏறும் நாள் வரும்" என விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.2026 சட்டப்பேரவை... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,750 கன அடியிலிருந்து வினாடிக்கு 56,996 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

புது தில்லி: தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது. யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெள... மேலும் பார்க்க

ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 254 ஆவது நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி்சாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்திய சுதந்தி... மேலும் பார்க்க