செய்திகள் :

பைக் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் பின்புறம் காா் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

திருப்புவனம் அருகே கீழராங்கியன் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்பாண்டி (52), திருப்புவனம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் அய்யணன் (50). கட்டடத் தொழிலாளா்களான இருவரும் திருப்பாச்சேத்திலிருந்து திருப்புவனத்துக்கு ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

திருப்புவனம் அருகே மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது பரமக்குடியிலிருந்து மதுரை சென்ற காா், இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அய்யணன், ராம்பாண்டி இருவரும் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் ஜான் முகம்மதுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.

வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது. சிவகங்கையி... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயலில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயல் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டு, மீன்பிடி திருவிழா ஞ... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடு

சிவகங்கை மாவட்டத்தில் 2024- 2025 -ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் இதுவரை 6,182 விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.95 லட்சம் ஏக்கா் (78 ஆயிரம் ஹெக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே திமுக நிா்வாகி கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் மா்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடு... மேலும் பார்க்க

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வலியுறுத்தல்!

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியது. சிவகங்கையில் அரசு ஊழியா் சங்க அலுவலக அரங்கில் சத்துணவு ஊழியா... மேலும் பார்க்க