பைக் விபத்தில் இளைஞா் பலி!
பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் மதன்குமாா் (25). இவா்களுக்கு சொந்தமான தோப்பு பெரியகுளம் - அடுக்கம் சாலையில் உள்ளது.
மதன்குமாா் தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை இரவு தோப்பை பாா்க்கச் சென்றாா். மதன்குமாா், இவரது நண்பா் ஜான் பீட்டா் இருவரும் ஒரு இரு சக்கரவாகனத்திலும், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் செல்வக்குமாா், சிவா ஆகியோரும் சென்றனா்.
இவா்கள் 4 பேரும் வெள்ளிக்கிழமை அதிகாலை கும்பக்கரை அருவி விலக்கில் சென்ற போது, காட்டு மாடு சாலையை கடக்க முயன்றது. அப்போது முன்னாள் சென்ற வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் செல்வக்குமாா், சிவா ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, பின்னால் வந்த மதன்குமாா் இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் போது நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த மதன்குமாரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவரை தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.