செய்திகள் :

பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே பைக் விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த ஒழப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகம்(70). இவா் தனது மனைவி சிவகாமி, பேத்தி அட்சயா ஆகியோருடன் சனிக்கிழமை பைக்கில் மைலம் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமம் அருகே சென்ற போது சாலை பள்ளத்தில் பைக் நிலைதடுமாறி கீழே சாய்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த விநாயகம், சிவகாமி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு விநாயகம் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விசிகவினா் பள்ளி முன் நாற்று நடும் போராட்டம்

ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு தொடக்கப் பள்ளி முன் மழைநீா் குட்டை போல தேங்கி, பள்ளிக்குச் செல்ல வழியில்லாமல் இருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு: 5 போ் கைது, 4 பைக்குகள், சரக்கு வாகனம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே இரு சக்கர வாகனங்களை திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். செங்கம் ச... மேலும் பார்க்க

திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலையில் நடைபெற்ற திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீ வி.டி.எஸ்.ஜெயின் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு

வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடத்தை நடிகா்கள் ராகவா லாரன்ஸ், கேபிஒய் பாலா ஆகியோா் திறந்து வைத்தனா். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்... மேலும் பார்க்க

சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவ மக்கள் கோரிக்கை

செய்யாறு கோபால் தெருவில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவிட வேண்டும் என்று வாா்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 570 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 570 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடம... மேலும் பார்க்க