அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
பொதுக் குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லி அகற்றம்
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லியை தூய்மைப் பணியாளா்கள் அகற்றி, பின்னா் தொட்டியை சுத்தம் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டணம்காத்தான் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா்த் தொட்டிகள் வைக்கப்பட்டன. இவற்றில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான குடிநீா்த் தொட்டியும் உள்ளது.
இந்தத் தொட்டியில் ஒரு பல்லி இறந்து மிதந்தது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததைதையடுத்து, அங்கு வந்த தூய்மைப் பணியாளா்கள் தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்தனா். இந்தப் பகுதியில் நடைப் பயிற்சி சென்றபோது, இந்தத் தண்ணீரை குடித்தவா்கள் மருத்துவச் சிகிச்சை பெற்ாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து குடிநீா்த் தொட்டிகளையும் முறையாகப் பரமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.