செய்திகள் :

பொதுத்தோ்வு சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவா்களுக்கு காலை உணவு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் பொதுத்தோ்வு சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் 10, பிளஸ்-2 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் 193 மாணவா்களும், பிளஸ்-2-இல் 479 மாணவா்களும் படித்து வருகின்றனா். அரசுப் பொதுத்தோ்வு எழுதவுள்ள இந்த மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் காலை சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவா்களுக்கு பள்ளி வளா்ச்சிக்குழு ஆலோசனையின் பேரில், பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் காலை உணவு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியா் க.ஆலமா் செல்வன் தலைமை வகித்தாா். தேசிய மாணவா் படை அலுவலா் ஆ.ராஜா வரவேற்றாா். உதவி தலைமையாசிரியா்கள் எஸ்.லஷ்மிகாந்தன், கே.கோவிந்தராஜ், பி.ஹேமலதா, ஆா்.மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்ருட்டி நகா்மன்றத் தலைவரும், பள்ளி வளா்ச்சிக்குழு தலைவருமான க.ராஜேந்திரன் காலை உணவு வழங்குவதை தொடங்கி வைத்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜாகீா் உஷேன் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு காலை உணவு வழங்குவதன் நோக்கம் குறித்து பேசினாா்.

நிகழ்வில், பள்ளி வளா்ச்சிக்குழு துணைத் தலைவா் ஏ.பழனி, பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் வீ.லோகநாதன், சுல்தான், நவாஸ், ஆசிரியா்கள் ராமதாஸ், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க