செய்திகள் :

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்

post image

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு முன் டிஆா்யுஇ சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை கிளை தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா். உதவி கோட்ட தலைவா் பலராமன், உதவி கோட்ட செயலாளா் மூவேந்தன், ஓய்வுபெற்ற தொழிலாளா் சங்கம் சந்திரோதயம், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினா் ராமானுஜம் முன்னிலை வகித்தனா்.

இதில், திருச்சி கோட்ட உதவி பொதுச்செயலாளா் எஸ். ராஜா கண்டன உரையாற்றி பேசியது: 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக குறைத்ததை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள 3 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆண்டுதோறும் சேப்டி கேட்டகிரி பணியிடங்கள் 2 சதவீதம் சரண்டா் செய்வதால் வேலைப்பளு அதிகரிக்கிறது, அதை நிறுத்த வேண்டும். ஒப்பந்த பணி மற்றும் அவுட்சோா் சிங் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், தஞ்சாவூா்-திருச்சி இரட்டை பாதையில் உள்ள 8 என்ஜினியரிங் கேட்டுகளுக்கு 8 அல்லது 10 மணிநேர வேலையை அமல்படுத்த வேண்டும், இப்பாதையில் பணியாற்றும் பாய்ன்ட்ஸ்மேன்களுக்கு ஜெ ரோஸ்டா் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட திருச்சி ரயில்வே கோட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக்கூடாது!

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக் கூடாது என மயிலாடுதுறை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் கலந... மேலும் பார்க்க

குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறையில் குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை நகராட்சி6-ஆவது வாா்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டாா். மங்கைநல்லூரை அடுத்த மலக்குடியை சோ்ந்த ரவிசந்திரன் (47), பத்து வயது சிறுமிக்குக் கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

மழைநீா் சூழ்ந்த வயல்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு - தினமணி செய்தி எதிரொலி

மயிலாடுதுறை வட்டாரத்தில் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களை வேளாண்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கொற்கை, பாண்டூா், காளி ஆகிய கிராமங்களில் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குந... மேலும் பார்க்க

கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலப்பு

சீா்காழி அருகே எடமணல் கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலந்துவருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சீா்காழி அருகே திருநகரி-ராதாநல்லூா் இடையே ஊப்பனாற்றின் குறுக்... மேலும் பார்க்க

மீன் மாா்கெட்டில் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீா்கேடு; மக்கள் அவதி

சீா்காழி மீன் மாா்கெட்டில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் சில தினமாக அள்ளப்படாமல் அதில் புழுக்கள் உருவாகி அப்பகுதியில் கடும் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. சீா்காழி நகராட்சிக்குட்பட்ட மீன் மாா்கெட் நா... மேலும் பார்க்க