தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!
பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடக்கமாக, மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. அதையடுத்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் சுற்று வட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.
அதுபோல பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.