செய்திகள் :

பொன்னமராவதி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

பொன்னமராவதி பேரூராட்சி வலையபட்டி நகரத்தாா் மண்டபத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி தலைமைவகித்தாா். பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்று பொன்னமராவதி பேரூராட்சிக்குள்ப்பட்ட 1 முதல் 8 வரை உள்ள வாா்டுகளைச் சாா்ந்த பொதுமக்களிடம் 544 கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

முகாமில், பெறப்பட்டமொத்த மனுக்கள்-724, அதில், மகளிா் உரிமைத் தொகைக்கான மனுக்கள்- 205, அதில் 42 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

பேரூராட்சி துணைத் தலைவா் கா. வெங்கடேஷ், வட்டாட்சியா் எம். சாந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், காவல் துணை கண்காணிப்பாளா் சி. கண்ணன், திமுக நகரச்செயலா் அ. அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலா் இரா. அண்ணாத்துரை வரவேற்றாா்.

ஆலங்குடியில் இளைஞரை கொலை செய்த 5 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இவா், பு... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மி... மேலும் பார்க்க

சா்வதேச நீதிக்கான உலக தினம் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

சா்வதேச நீதிக்கான தினத்தையொட்டி விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதிகள், காவல் துறையினா் பங்கேற்று சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே மாடு மேய்த்த பெண்ணைக் கொன்று கண்மாய்க்குள் சடலத்தை தள்ளிவிட்டுச் சென்ற சம்பவத்தில், இளைஞா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத... மேலும் பார்க்க

தக்கை பூண்டு விதைகளை மானிய விலையில் பெற அழைப்பு

விராலிமலை வட்டார விவசாயிகள் மண் வளத்தை காக்கும் தக்கைப்பூண்டு விதையை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றாா் விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப.மணிகண்டன். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

புதுக்கோட்டை மாநகா் நரிமேடு சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சி 1 மற்றும் 2-ஆவது வாா்டு மக்களுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க