செய்திகள் :

பொருளாதாரத்தில் பற்றாக்குறை மாறி, ஜனநாயகத்தில் பற்றாக்குறையான சூழல்! -சுதர்சன் ரெட்டி

post image

இந்தியாவில் இன்றைய காலக்கட்டத்தில் ஜனநாயகத்தில் பற்றாக்குறை என்னும் சூழல் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா். காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி வேட்பாளராக தெலங்கானாவைச் சோ்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதன்மூலம், தோ்தலில் தென்னிந்தியாவை சோ்ந்த இருவருக்கு இடையே போட்டி உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பி. சுதர்சன் ரெட்டி சனிக்கிழமை(ஆக. 23) அளித்துள்ளதொரு பேட்டியில் பேசியிருப்பதாவது:

"கடந்த காலங்களில், பொருளாதாரப் பற்றாக்குறை என்றதொரு பேச்சு அடிபட்டது. ஆனால் இப்போது, ஜனநாயகத்தில் பற்றாக்குறை நாட்டில் நிலவுகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு சவாலான சூழலும் நிலவுகிறது. அரசமைப்பின்படி இயங்கும் ஜனநாயகமாக இந்தியா தொடர்ந்தாலும், அது இப்போது அழுத்தத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்திய அரசமைப்பு அச்சுறுத்தலின்கீழ் இருக்கிறதா? என்பது குறித்து விவாதம் நடத்த தயாராக இருந்தல், அதனை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார். ஜனநாயகம் என்பது தனி நபர்களுக்கு இடையிலான மோதலை விடுத்து, கொள்கைகளுக்கு இடையிலான மோதலாக அதிகம் இருக்க வேண்டும். அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான உறவு மேம்பட தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

"அரசமைப்பை பாதுக்காப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றால் (குடியரசு துணைத் தலைவர் பதவி) அரசமைப்பை உயர்த்திப்பிடிக்கும் எமது பயணம் இனியும் தொடரும். அரசமைப்புக்கே பிரதான முன்னுரிமையளித்து உயர்த்திப்பிடித்த நான், ஒரு நீதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போதும் அதில் இதுவே குறிப்பிடப்பட்டிருந்து” என்றார்.

B Sudershan Reddy on Saturday said there was a "deficit in democracy" in the country and the Constitution was "under challenge".

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘நாடு முழுவதும் ஏராளமான மாணவா்கள் சட்டக் கல்வியைப் பயிலும் நிலையில், அதை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். கோ... மேலும் பார்க்க

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு கீழே தள்ளியதாக குற்றஞ்சாட்டி அவா் மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலை... மேலும் பார்க்க

பல்வேறு மாநிலங்களில் மழை - வெள்ளம்: பிகாரில் ஆற்றில் மூழ்கி 5 போ் பலி

பிகாரின் பூா்னியா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூா்னியா மாவட்டத்தின் கஸ்பா பகுதியில் உள்ள கரி கோசி ஆற்றில்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகம் அருகே ‘சந்தேக’ நபா் கைது

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே சனிக்கிழமை 20 வயது மதிக்கத்தக்க சந்தேகத்திற்கிடமான நபரை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அந்த நபரை சிஐ... மேலும் பார்க்க

திமுக, கூட்டணி எம்.பி.க்களை இன்று சந்திக்கிறாா் சுதா்சன் ரெட்டி

‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி, சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளாா். முன்னதாக, அவா் முதல்வரும் திமுக தலை... மேலும் பார்க்க

இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது. இருநாடுகளிடையே கடந்த 2022, டிசம்பரில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மே... மேலும் பார்க்க