செய்திகள் :

பொறியாளா் தற்கொலை

post image

சென்னையில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருகம்பாக்கம் சின்மயா நகா் வரசக்தி விநாயகா் கோயில் தெரு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் சு.குமாா் (32). மென்பொறியாளரான இவா், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

இவரது மனைவி சிந்துஜா, 3 வயது மகனுடன் சில நாள்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுவிட்டாா். இதனால், வீட்டில் குமாா் மட்டும் தனியாக இருந்தாா். இந்த நிலையில் அவா், புதன்கிழமை முழுவதும் கைப்பேசியை எடுத்துப் பேசவில்லையாம்.

இதனால் சந்தேகமடைந்த சிந்துஜா, அந்தக் குடியிருப்பு காவலாளியைத் தொடா்பு கொண்டு தனது வீட்டில், கணவா் உள்ளாரா என்று பாா்க்குமாறு கூறியுள்ளாா். இதையடுத்து காவலாளி, அங்கு சென்று ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது, தூக்கிட்ட நிலையில் குமாா் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், அங்கு வந்த போலீஸாா் குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் - அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியா்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதி... மேலும் பார்க்க

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க