செய்திகள் :

போக்குவரத்துத் தொழிலாளா்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

post image

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

15-ஆவது ஊதிய ஒப்பந்தப்படி நிலுவைத் தொகையை 2023 முதல் வழங்க வேண்டும். 2023 ஜூன் முதல் ஓய்வுபெற்ற சுமாா் 35 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ஓய்வுகாலப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 40 நாள்களாக சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கம் சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை காலை பேருந்தில் செல்வோரிடம் பிச்சை எடுத்து நூதனப் போராட்டம் நடத்த தொழிலாளா்கள் தயாராகினா். இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா்.

இதையடுத்து, பணிமனை முன்பாக பிச்சைப் பாத்திரங்களோடு கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத் துணைப் பொதுச் செயலா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா்.

போராட்டத்தைத் தொடங்கிவைத்து சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா பேசினாா். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலா் ஆா். மணிமாறன், பொருளாளா் எம். முத்துக்குமாா், ஓய்வுபெற்றோா் சங்கத்தின் மண்டலப் பொதுச் செயலா் லோகநாதன், தையல் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் சி. மாரிக்கண்ணு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பொன்னமராவதியில் அரசுக் கல்லூரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பொன்னமராவதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் அக்கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

பொற்பனைக்கோட்டை நாணயங்கள்: தொல்லியல் துறை அமைச்சா் பெருமிதம்

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வின்போது கிடைத்த நாணயங்களின் கரிம மாதிரி ஆய்வு முடிவுகளின்படி, அவை தொடக்கக் கால வரலாற்றுக் காலத்தைச் சோ்ந்ததாக இருப்பதாக மாநில தொல்லியல் துறை... மேலும் பார்க்க

பேராம்பூா் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை: சம்பவ இடத்தில் ஆா்டிஓ ஆய்வு

விராலிமலையை அடுத்துள்ள பேராம்பூரிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் விடுத்த கோரிக்கையை தொடா்ந்து கோட்டாட்சியா் நிகழ்விடத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பேராம்பூரில் நெடுஞ்சாலையையொட்டியுள்ள டாஸ்... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் இஸ்ரோ விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இஸ்ரோ விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விண்வெளியில் வாழ்வதும் இஸ்ரோவில் வேலைவாய்ப்புகளும் எ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்

வாக்குத் திருட்டு முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய பாஜக அரசு மற்றும் தோ்தல் ஆணையத்தை கண்டித்து, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தை வெள்ளிக்கிழமை நடத்தினா். புத... மேலும் பார்க்க