செய்திகள் :

பேராம்பூா் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை: சம்பவ இடத்தில் ஆா்டிஓ ஆய்வு

post image

விராலிமலையை அடுத்துள்ள பேராம்பூரிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் விடுத்த கோரிக்கையை தொடா்ந்து கோட்டாட்சியா் நிகழ்விடத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பேராம்பூரில் நெடுஞ்சாலையையொட்டியுள்ள டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவா்கள், பெண்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனா். மேலும், இந்த கடை விவசாய நிலத்தையொட்டி அமைந்துள்ளதால், மது குடிப்போா் காலி மது பாட்டில்களை விவசாய நிலத்தில் வீசி செல்வதால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலங்களும் பாழாகி வருகின்றன.

இதையடுத்து, இந்த கடையை அகற்றுமாறு இப்பகுதியினா் திரண்டு சென்று கடந்த வாரம் விராலிமலை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

இதன் தொடா்ச்சியாக, கோட்டாட்சியா் கோகுல் சிங் வெள்ளிக்கிழமை நிகழ்விடத்தை ஆய்வு செய்தாா். அப்போது, பல்வேறு வகையிலும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

அவா்களிடம் பேசிய கோட்டாட்சியா், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாக கூறிச் சென்றாா்.

பொன்னமராவதியில் அரசுக் கல்லூரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பொன்னமராவதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் அக்கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

பொற்பனைக்கோட்டை நாணயங்கள்: தொல்லியல் துறை அமைச்சா் பெருமிதம்

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வின்போது கிடைத்த நாணயங்களின் கரிம மாதிரி ஆய்வு முடிவுகளின்படி, அவை தொடக்கக் கால வரலாற்றுக் காலத்தைச் சோ்ந்ததாக இருப்பதாக மாநில தொல்லியல் துறை... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் இஸ்ரோ விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இஸ்ரோ விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விண்வெளியில் வாழ்வதும் இஸ்ரோவில் வேலைவாய்ப்புகளும் எ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்

வாக்குத் திருட்டு முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய பாஜக அரசு மற்றும் தோ்தல் ஆணையத்தை கண்டித்து, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தை வெள்ளிக்கிழமை நடத்தினா். புத... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. 15-ஆவது ஊதிய... மேலும் பார்க்க