செய்திகள் :

போக்குவரத்து நெரிசல்: சென்னையிலிருந்து தாமதமாகப் புறப்பட்ட விமானங்கள்!

post image

பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் சென்னையிலிருந்து 10-க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மேம்பாலத் தடுப்பில் மோதியது. இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வர, பேருந்து ஓட்டுநர் சாலையின் தடுப்பின் மீது பேருந்தை ஏற்றியுள்ளார்.

இதனால் தடுப்புகள் சேதமடைந்ததால் பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மறுவழியில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்நிலையில் விமான நிலையம் செல்லும் பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பலரும் விமான நிலையங்களுக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப சென்னையில் இருந்து பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூர், மஸ்கத், கொழும்பு விமானங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமான நிலையில் புறப்பட்டன.

தற்போது பல்லாவரம் மேம்பாலம் பகுதில் போக்குவரத்து சீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்புகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கல்லூரிப் பேருந்தின் ஓட்டுநர் உதயா என்பவர் மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

College bus mishap on Pallavaram flyover brings GST road to a halt delays flights

விஜய் தராதரம் அவ்வளவுதான்: அமைச்சர் கே.என். நேரு பதிலடி!

திருச்சி: நேற்று அரசியலுக்கு வந்த விஜய், ஒரு மாநிலத்தின் முதல்வரை, மாபெரும் இயக்கத்தின் தலைவரை, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவரை நாகரிகமன்றி பேசியிருப்பது அவமரியாதைக்குரியது, இ... மேலும் பார்க்க

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26 இல் தமிழகம் வருவதாக இருந்த நிலையில், அரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, புனரமைக்கப்ப... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின... மேலும் பார்க்க

இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா: நெல்லையில் பலத்த பாதுகாப்பு

திருநெல்வேலியில் நடைபெறும் 5 மாவட்டங்களுக்குள்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை(ஆக.22) தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ... மேலும் பார்க்க

பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மோதிய... மேலும் பார்க்க

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார் விஜய்: ஆா்.பி.உதயகுமாா்

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காணும் விஜய், தான் மட்டுமே தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர்போல அவரது பேச்சு இருந்தால், அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆ... மேலும் பார்க்க