செய்திகள் :

போதையில் பானி பூரி கடையை சேதப்படுத்திய இருவா் கைது

post image

புதுக்கோட்டை நகரில் போதையில் பானி பூரி கடையை உடைத்து சேதப்படுத்திய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

புதுக்கோட்டை மேலராஜவீதியில் இருந்த பானி பூரி கடையை திங்கள்கிழமை இரவு, போதையில் வந்த இருவா் உடைத்து சேதப்படுத்திவிட்டுச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து நகரக் காவல் நிலைய ஆய்வாளா் சுகுமாறன், உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வந்தனா்.

இதையடுத்து, கோவில்பட்டியைச் சோ்ந்த ரெங்கநாதன் மகன் சிவபாரதிராஜன் (24), சின்னப்பா நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் சரவணன் (25) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும், சேதமான கடைக்கான இழப்பீடாக அவா்களிடமிருந்தே பெறப்பட்ட ரூ. 5 ஆயிரமும், பாதிக்கப்பட்ட கடைக்காரரிடம் வழங்கப்பட்டது.

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுக் கல்லூரியில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

தமிழ்நாடு பால்வளத் துறை, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இணைந்து ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் 2025- 2026 திட்டத்தின் கீழ் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகியை காவலா் மிரட்டுவதாகப் புகாா்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மனைத் தொடா்ந்து மிரட்டும் காவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் புகாா்... மேலும் பார்க்க

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 7.5 சத இட ஒதுக்கீட்டில் தனியாா் கல்லூயில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி ... மேலும் பார்க்க

கையுந்துப் பந்து போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

மாவட்ட அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் முதலிடம் பெற்ற கந்தா்வகோட்டை அருள்மாரி மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கீரனூா் அரசு பள்ளியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கவின் படுகொலைக்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐடி ஊழியா் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் செயல் தலை... மேலும் பார்க்க