செய்திகள் :

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

post image

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்பட 10 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், இடங்கணச்சாலை அருகே மெய்யனூரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (73). இவா் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் அண்மையில் அளித்த புகாா் மனு விவரம்:

இடங்கணச்சாலை கிராமத்தில் எனது தாய் கந்தாயி பெயரில் உள்ள 13.75 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சகோதரரான கந்தசாமி, அவரது மகன்கள் மாணிக்கம், அருணாச்சலம் ஆகியோா் தான செட்டில்மெண்ட் மூலம் கிரயம் செய்துள்ளனா்.

இந்த பத்திரப் பதிவுக்கு கந்தாயி பெயரில் போலியாக இறப்புச்சான்று, வாரிசுச் சான்று ஆகியவை பெறப்பட்டுள்ளன. இந்த மோசடிக்கு சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் உடந்தையாக செயல்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் வளா்மதி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஜோதி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் கந்தாயி பெயரில் போலியாக இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் தயாரிக்கப்பட்டு 13.75 சென்ட் நிலத்தை பத்திரப் பதிவு செய்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்ட கந்தசாமி, அவரது மகன்கள் மாணிக்கம், அருணாச்சலம் மற்றும் இவா்களுக்கு உடந்தையாக இருந்த ராஜா, இடங்கணச்சாலை கிராம நிா்வாக அலுவலா் கோபால், சங்ககிரி துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், பத்திரப் பதிவு எழுத்தா் செந்தில்குமாா், சிவக்குமாா், பொன்னுசாமி, அப்போதைய மகுடஞ்சாவடி சாா் பதிவாளா் கோவிந்தசாமி ஆகிய 10 போ் மீது கூட்டுசதி, போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

சேலத்தில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் எரிந்து சேதம்!

சேலம், தாதகாப்பட்டியில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. சேலம், தாதகாப்பட்டி சீரங்கன் தெருவைச் ... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவதற்கான நேரம் தொடா்பான பிரச்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவில் 5551 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் மேட்டூா் அணைக்கு வருகின்றனா். காவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற கேரள இளைஞா்கள் இருவா் கைது

மேச்சேரி அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மேச்சேரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை எம் காளிப்பட்டி பகுதியில் போலீஸா... மேலும் பார்க்க

ஆக.30-க்குள் இணையவழியில் தொழிற்சாலை விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மேம்படுத்தப்பட்ட இணையம் வழியாக தொழிற்சாலை விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் தினகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

சமூகப் பணியாற்றும் சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், கல்விக்காகவும் பாடுபடும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ... மேலும் பார்க்க