செய்திகள் :

போலி, கலப்பட உரங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

post image

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான, கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மாநில முதல்வா்களுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உர உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், அவ்வப்போது உர மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் போலியான, கலப்படம் செய்யப்பட்ட, தரமற்ற உரங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

பாரம்பரிய உரங்களுடன் நானோ உரங்கள் அல்லது உயிரி ஊக்குவிப்பு பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். உரம் தொடா்பாக எந்த இடத்தில் தவறு நடப்பது கண்டறியப்பட்டாலும் உரிமம் ரத்து, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் இருந்து உரத்தின் தரம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிய வேண்டும். போலிகள் விவசாயிகள் கைக்குச் சென்றடைந்தால், அவற்றை விற்பனை செய்தவா்கள் தொடங்கி உற்பத்தி செய்தவா்கள் வரை விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகளின் நலனில் மாநில அரசுகள் முழு அக்கறை காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வி: கேஜரிவால்

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார். தலைநகரில் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்... மேலும் பார்க்க

ஏசி இயங்காததால் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்! ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பரபரப்பு!

தில்லி - மும்பை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசி இயங்காததால் ஆத்திரமடைந்த இரண்டு பயணிகள், விமானி அறைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தில்லியில் இருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட்டின் எஸ்ஜி 9282 விமானம்... மேலும் பார்க்க

அமர்நாத்: 12 நாள்களில் 2.25 லட்சம் பேர் தரிசனம்!

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலை 12 நாள்களில் 2.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஜூலை 3-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் காண்டர்பால் மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

தில்லியில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புது தில்லியில் செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி மற்றும் செயிண்ட் தாமஸ் பள்ளிக்கூடத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புது தில்லியின் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.தெற்கு மும்பையில் உள்ள மும்பை பங்குச்சந்தை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, அந்த கட்டடத்தில் வெட... மேலும் பார்க்க

ஒடிசாவில் மாணவி மரணம்; பாஜகவின் நேரடிக் கொலை: ராகுல் காந்தி

ஒடிசா மாநிலத்தில் நீதிக்காகப் போராடும் ஒரு மகளின் மரணம், பாஜக அமைப்பின் நேரடிக் கொலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலம் ப... மேலும் பார்க்க